Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனி கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி மட்டுமே பேசுவார்: செல்லூர் ராஜூ

இனி கூட்டணி  குறித்து எடப்பாடி பழனிசாமி மட்டுமே பேசுவார்: செல்லூர் ராஜூ
, புதன், 4 அக்டோபர் 2023 (15:26 IST)
கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே பேசுவார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்  
 
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அரசியல் கருத்துகளை ஊடகத்தில் தெரிவிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
 
மக்கள் பிரச்சனை, தொகுதி பிரச்சனைகளை மட்டுமே ஊடகத்தில் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே கூட்டணி குறித்தும் அரசியல் கருத்துகள் குறித்தும் பேசுவார் என்றும் தெரிவித்தார். 
 
அதிமுகவின் இந்த நிலைப்பாடுக்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிருஷ்ணசாமி கொலை முயற்சி வழக்கு- மூவருக்கு ஆயுள் தண்டனை