Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்பார்த்த விருப்பமனு இல்லை.. அவகாசத்தை நீட்டித்த எடப்பாடி பழனிசாமி..!

Mahendran
வெள்ளி, 1 மார்ச் 2024 (17:51 IST)
அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளிக்க இன்று கடைசி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 
 
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. 
 
அந்த வகையில் அதிமுக, திமுக உட்பட அரசியல் கட்சிகள் விருப்ப மனுக்களை போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து பெற்று வரும் நிலையில் அதிமுக தரப்பில் விண்ணப்பம் செய்பவர்கள் இன்றுக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட எதிர்பார்த்த விருப்ப மனுக்கள் பெறப்படவில்லை என்பதை அடுத்து அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது விருப்ப மனுக்கள் பெறும் தேதியை நீடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பிப்ரவரி 21 முதல் மார்ச் 1 வரை விருப்ப மனுக்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மார்ச் 6 வரை கால அவகாசத்தை நீட்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி செல்லும் ரயில்களில் புதிய எல்.எச்.பி பெட்டிகள்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

கோடைகால தண்ணீர் பந்தல்.. தொண்டர்களுக்கு தவெக அன்பு உத்தரவு.!

பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்.. அடித்து நொறுக்கிய மாணவர்கள்..!

மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி, புத்தக வாசிப்பு மண்டலம்..Etc! - சென்னை மாநகராட்சி பட்ஜெட் சிறப்பம்சங்கள்!

புத்தகங்கள் முறைகேடாக விற்பனை.. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் அதிகாரி டிஸ்மிஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments