Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஈபிஎஸ்-ஓபிஎஸ்!

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (07:49 IST)
தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஈபிஎஸ்-ஓபிஎஸ்!
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ஆம் தேதி அரசியல் கட்சி தலைவர்கள் கொண்டாடி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த முறை இன்னும் ஒரு சில மாதத்தில் தேர்தல் வரவிருப்பதால் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய கட்சி தலைவர்களும் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர் 
 
அந்த வகையில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜையை ஒட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 
முத்துராமலிங்க தேவரின் 113 வது ஜெயந்தி மற்றும் 58 வது குருபூஜையை அடுத்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் இந்த மரியாதை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments