பொறியியல் படிப்புக்கு 3வது சுற்று கலந்தாய்வு.. இன்னும் ஒரு லட்சம் இடங்கள் காலி..!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (08:16 IST)
பொறியியல் படிப்புக்கு ஏற்கனவே இரண்டு கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் நேற்று முதல் மூன்றாவது கட்ட கலந்தாய்வு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் இந்த கலந்தாய்வு செப்டம்பர் 3ஆம் தேதி உடன் நிறைவு பெற உள்ளது என்றும் அதன் பின் காலியிடங்கள் இருந்தால் துணை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் சுமார் ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
 பொறியியல் படிப்புக்கு முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 28ஆம் தேதி, இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் ஒன்பதாம் தேதியும் தொடங்கியது. இந்த இரண்டு கலந்தாய்வுகளில் 56 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன. 
 
இந்த நிலையில் மூன்றாவது கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கிய நிலையில் 89 ஆயிரத்து 694 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 3ஆம் தேதி உடன் இந்த கலந்தாய்வு நடைபெறுவதால் அதன் பின்னும் காலியிடங்கள் இருந்தால் துணை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க அனுமதிக்க முடியாது. ஆர்.எஸ். பாரதி மனுவை தள்ளுபடி செய்வேன்: நீதிபதி அதிரடி..!

தமிழகத்தில் பீகாரிகள் அவமதிக்கப்படுகிறார்களா? பிரதமரின் சர்ச்சை பேச்சு..!

கணவரை கொன்று புதைத்த மனைவி மற்றும் மகள்கள்: வெளியூர் சென்றதாக 50 நாட்களாக நாடகம்..!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை.. அதிகாரப்பூர்வமாக வெளியீடு..!

திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் வீட்டில் மர்மமாக மரணம் அடைந்த மணமகள்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments