Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் படிப்பு: கலந்தாய்வு குழுவின் முக்கிய அறிவிப்பு

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (11:24 IST)
பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் கலந்தாய்வு குழு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது 
 
பொறியியல் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய நாளை முதல் மாணவர்கள் முன் வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பட்டியலின மாணவர்கள் நாளை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொறியியல் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய விண்ணப்பிக்கலாம் என பொறியியல் கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது. 
 
மேலும் நவம்பர் 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக இட ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும் என்றும் மாலை 5 மணிக்குள் தற்காலிக இடங்களை மாணவர்கள் உறுதி செய்து கொள்ளவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பொறியியல் கலந்தாய்வு குழுவின் இந்த முக்கிய அறிவிப்பை மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments