பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க 4 நாட்கள் மட்டுமே அவகாசம்.. சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பம்..!

Webdunia
வியாழன், 1 ஜூன் 2023 (07:41 IST)
பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே அவகாசம் இருக்கும் நிலையில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இதுவரை விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
 சமீபத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் பொறியியல் கல்லூரிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடந்தாண்டு 2,11,417 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் இந்த ஆண்டு 2,11,905 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கையை இந்த ஆண்டும் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே அவகாசம் இருக்கும் நிலையில் பொறியியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவ மாணவிகள் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சவுதியில் இருந்து கேரளாவுக்கு வந்த விமானம்.. திடீரென நடுவானில் வெடித்த டயர்.. 160 பயணிகள் நிலை என்ன?

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை.. மாணவர் தலைவர் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு..!

பொங்கல் பண்டிகையும் பிரதமர் மோடியின் வருகையும்.. தி.நகரில் தங்கி அரசியல் செய்யும் அமித்ஷா..!

சீமான் - விஜய்யின் கடப்பாறை அரசியல்.. விஜய்க்கு சீமான் எல்லாம் ஒரு எதிரியா?

ஈரோட்டில் விஜய்.. திருப்பூரில் அண்ணாமலை.. திமுக அரசுக்கு இரட்டை நெருக்கடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments