Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. பரபரப்பு தகவல்..!

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (11:56 IST)
பாஜக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் வீட்டில் திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
பாஜக அலுவலகத்தில் பணிபுரியும் ஜோதி குமார் என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதே போல் சென்னை தியாகராய நகரில் ரியல் எஸ்டேட் அதிபராக இருக்கும் சண்முகம் என்பவர் அது வீட்டிலும் சோதனை செய்து வருவதாகவும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் இந்த சோதனையை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
தி நகர் சரவணா தெருவில் உள்ள ரியல் எஸ்டேட் தொழிலபதிபர் சண்முகம் வீட்டில் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை  செய்ய வந்த நிலையில் வீடு பூட்டி இருந்ததால் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரை தளத்தில் காத்திருந்து பின்னர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
 
தொழிலதிபர் சண்முகம் அடிக்கடி விஜய் அபார்ட்மெண்டில் 2வது மாடியில் உள்ள வீட்டிற்கு வந்து செல்வதாக தகவல் வெளியானதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 43-வது முறையாக நீட்டிப்பு.!

ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்.. ஆளுநர் அழைப்பு..!

பிரதமர் மோடி ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் பயணம்.. புதின் உடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments