விசிகவில் இணைந்த ஆதவ் அர்ஜுன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. பரபரப்பு தகவல்..!

Mahendran
சனி, 9 மார்ச் 2024 (16:03 IST)
சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து துணை பொதுச் செயலாளர் என்ற பதவியை பெற்ற ஆதவ் அர்ஜுன் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் உள்ள ஐந்து இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வெளியான தகவலை ஏற்கனவே பார்த்தோம். அதில் ஒன்று சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சேர்ந்த ஆதவ் அர்ஜுன் வீடு என்று கூறப்படுகிறது

ஆதவ் அர்ஜுன் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி .வருவதாகவும் தேனாம்பேட்டை கஸ்தூரிரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜுன் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது

அது மட்டும் இன்றி ஆதவ் அர்ஜுனனுக்கு சொந்தமான நான்கு இடங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்த ஆதவ் அர்ஜூன் லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

அடுத்த கட்டுரையில்
Show comments