Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்கிற்கு அமலாகத்துறை சம்மன்: அடுத்த அதிரடி..!

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (16:54 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். ஆனால் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதை அடுத்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜியை அடுத்து அவரது சகோதரர் அசோக் என்பவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. சமீபத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது விசாரணைக்கு ஆஜராக அசோக்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம்? எந்த பகுதியில் மாற்றம்?

கதறி அழுது வீடியோ போட்ட பாடகி செலினா கோம்ஸ்.. பதில் வீடியோ போட்ட வெள்ளை மாளிகை..!

மேலும் 4 மாவட்டங்களில் அரசின் தோழி விடுதி! எங்கெங்கு தெரியுமா?

திமுகவை எதிர்ப்பதை விட்டுட்டு உங்க கொள்கை என்னன்னு சொல்லுங்க! - விஜய்க்கு சரத்குமார் கேள்வி!

10ஆம் வகுப்பு படித்து 10 வருடமாக போலி டாக்டராக இருந்த பெண்.. அதிரடி கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments