Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் விடிய விடிய விசாரணை.. 200 கேள்விகள் கேட்க முடிவு

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (08:59 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து நேற்று இரவு புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜியை சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனுக்கு அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விடிய விடிய விசாரணை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஐந்து நாட்கள் காவலில் எடுத்துள்ள அமலாக்கத்துறை, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜியிடம் விடிய விடிய பத்து மணி நேரமாக விசாரணை செய்ததாக கூறப்படுகிறது. 
 
செந்தில் பாலாஜி இடம் மொத்தம் 200 கேள்விகள் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தினந்தோறும் 50 கேள்விகள் என்ற அடிப்படையில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து கொண்டிருப்பதால் சாஸ்திரி பவன் வளாகத்தை சுற்றிலும் மத்திய பாதுகாப்பு படை குவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments