Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12000 கோயில்களில் பூஜை செய்ய கூட வருமானம் இல்லை – அறநிலையத்துறை அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 19 ஜூலை 2020 (12:11 IST)
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 12,000 கோயில்களில் பூஜை செய்யக்கூட வருமானம் வருவதில்லை என அறநிலையத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அறநிலையத்துறையின் கீழ் இயங்கிவரும் 44,000 க்கும் மேற்பட்ட கோயில்களும் மார்ச் மாதம் 25 ஆம் தேதியோடு மூடப்பட்டன. இதனால் அந்த கோயில்களில் பணிபுரிந்தவர்களின் வருவாய் பாதிக்கப்பட்டது. இதனால் அவர்களின் வருமானத்துக்கு அறநிலையத்துறை மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

அதற்கு பதிலளித்த அறநிலையத்துறை ’எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 37,000 கோயில்களுக்கு ஒருவரை மட்டுமே பணியமர்த்தும் அளவுக்கு வருமானம் வருகிறது. 11,999 கோயில்களுக்கு ஒரு வேளை பூஜை செய்யக்கூட வருமானம் வருவதில்லை. ஆனாலும் கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் உள்ளிட்டவர்களுக்கு பக்தர்கள் தரும் காணிக்கை மற்றும் தரிசன டிக்கெட்களில் இருந்து பணம் கொடுக்கப்பட்டு வருகிறது’ எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments