Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12000 கோயில்களில் பூஜை செய்ய கூட வருமானம் இல்லை – அறநிலையத்துறை அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 19 ஜூலை 2020 (12:11 IST)
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 12,000 கோயில்களில் பூஜை செய்யக்கூட வருமானம் வருவதில்லை என அறநிலையத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அறநிலையத்துறையின் கீழ் இயங்கிவரும் 44,000 க்கும் மேற்பட்ட கோயில்களும் மார்ச் மாதம் 25 ஆம் தேதியோடு மூடப்பட்டன. இதனால் அந்த கோயில்களில் பணிபுரிந்தவர்களின் வருவாய் பாதிக்கப்பட்டது. இதனால் அவர்களின் வருமானத்துக்கு அறநிலையத்துறை மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

அதற்கு பதிலளித்த அறநிலையத்துறை ’எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 37,000 கோயில்களுக்கு ஒருவரை மட்டுமே பணியமர்த்தும் அளவுக்கு வருமானம் வருகிறது. 11,999 கோயில்களுக்கு ஒரு வேளை பூஜை செய்யக்கூட வருமானம் வருவதில்லை. ஆனாலும் கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் உள்ளிட்டவர்களுக்கு பக்தர்கள் தரும் காணிக்கை மற்றும் தரிசன டிக்கெட்களில் இருந்து பணம் கொடுக்கப்பட்டு வருகிறது’ எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments