Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் விளையாட்டு வீராங்கனையை ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது

Webdunia
செவ்வாய், 23 ஜனவரி 2018 (05:01 IST)
சென்னையில் தற்போது தேசிய அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கூடைப்பந்து அணிகளின் வீராங்கனைகள் வந்துள்ளனர்

இந்த நிலையில் உத்தரகாண்ட் மகளிர் அணியினர் தங்கியிருந்த ஒரு ஓட்டலில் வாலிபர் ஒருவர் வீராங்கனைகள் குளிக்கும்போது ஆபாச படம் எடுத்ததாக புகார் கூறப்பட்டது.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் அலாவுதீன் உசேன் என்பதும், அவர் ஒரு கட்டிட தொழிலாளி என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து நீதிமன்றத்தில் அலாவுதீனை போலீசார் ஆஜர் செய்தனர். நீதிமன்ற உத்தரவின்படி அலாவுதீன் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தை அடுத்து வீராங்கனைகள் தங்கியிருக்கும் ஓட்டல்களில் பாதிகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று வீராங்கனைகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராம்குமார் கடனை என்னால் தர முடியாது.. நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்த சிவாஜி மகன் பிரபு..!

மருதமலை முருகன் கோவில் வெள்ளிவேல் திருடு போகவில்லை: நிர்வாகம் விளக்கம்..!

வக்பு நிலத்தை அபகரித்தாரா கார்கே.. மாநிலங்களவையில் கடும் வாக்குவாதம்..!

பாம்பன் பாலம் திறப்பு எதிரொலி: தாம்பரம் - ராமேஸ்வரம் ரயில் குறித்த அறிவிப்பு..!

பிலால் கடையில் சாப்பிட்டவர்கள் 55 பேர் பாதிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments