Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் விளையாட்டு வீராங்கனையை ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது

Webdunia
செவ்வாய், 23 ஜனவரி 2018 (05:01 IST)
சென்னையில் தற்போது தேசிய அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கூடைப்பந்து அணிகளின் வீராங்கனைகள் வந்துள்ளனர்

இந்த நிலையில் உத்தரகாண்ட் மகளிர் அணியினர் தங்கியிருந்த ஒரு ஓட்டலில் வாலிபர் ஒருவர் வீராங்கனைகள் குளிக்கும்போது ஆபாச படம் எடுத்ததாக புகார் கூறப்பட்டது.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் அலாவுதீன் உசேன் என்பதும், அவர் ஒரு கட்டிட தொழிலாளி என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து நீதிமன்றத்தில் அலாவுதீனை போலீசார் ஆஜர் செய்தனர். நீதிமன்ற உத்தரவின்படி அலாவுதீன் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தை அடுத்து வீராங்கனைகள் தங்கியிருக்கும் ஓட்டல்களில் பாதிகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று வீராங்கனைகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments