சென்னையில் விளையாட்டு வீராங்கனையை ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது

Webdunia
செவ்வாய், 23 ஜனவரி 2018 (05:01 IST)
சென்னையில் தற்போது தேசிய அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கூடைப்பந்து அணிகளின் வீராங்கனைகள் வந்துள்ளனர்

இந்த நிலையில் உத்தரகாண்ட் மகளிர் அணியினர் தங்கியிருந்த ஒரு ஓட்டலில் வாலிபர் ஒருவர் வீராங்கனைகள் குளிக்கும்போது ஆபாச படம் எடுத்ததாக புகார் கூறப்பட்டது.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் அலாவுதீன் உசேன் என்பதும், அவர் ஒரு கட்டிட தொழிலாளி என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து நீதிமன்றத்தில் அலாவுதீனை போலீசார் ஆஜர் செய்தனர். நீதிமன்ற உத்தரவின்படி அலாவுதீன் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தை அடுத்து வீராங்கனைகள் தங்கியிருக்கும் ஓட்டல்களில் பாதிகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று வீராங்கனைகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR-ஐ ஏன் எதிர்க்கிறோம்? முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் விளக்கம்!

41 பேர் இறப்பிற்கு காரணமாக இருந்தவர் விஜய்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி..!

SIR திருத்தத்துக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்: தேதியை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

தேர்தல் பிரச்சாரமா? உல்லாச சுற்றுப்பயணமா? ராகுல் காந்தியை கிண்டல் செய்த பாஜக..!

பாதுகாப்பு பயிற்சியின்போது கிராமம் அருகே ஏவுகணை: ராஜஸ்தானில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments