Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டை இணைப்பு: புதிய தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

Webdunia
செவ்வாய், 23 ஜனவரி 2018 (04:18 IST)
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அவசியம் என கருதப்படும் நிலையில் ஆதார் அட்டையை கிட்டத்தட்ட அனைத்து ஆவணங்களிலும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு அதை நிறைவேற்றியும்விட்டது. ஆனால் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டையை மட்டும் இதுவரை மத்திய அரசு இணைக்க கூறவில்லை

வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கப்பட்டுவிட்டால் கள்ள ஓட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. மேலும் வாக்கு இயந்திரங்களிலும் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. இதனால் அரசியல்வாதிகள் இதற்கு மட்டும் விதிவிலக்கு அளித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது புதிய  தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஓம் பிரகாஷ்ராவத், செய்தியாளர்களிடம் பேசிய போது, வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறினார். நாடு முழுவதும் தேர்தல் பணிகள் நியாமானதாகவும், நேர்மையானதாகவும் நடத்தப்பட வேண்டும் என்றும், இதற்காக தேர்தல் முறைகளில் மாற்றங்களில் கொண்டு வர வேண்டும் என்றும் அதற்கு கண்டிப்பாக ஆதார் எண்னை வாக்காளர் அடையாள அட்டையோடு இணைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தலைமை தேர்தல் ஆணையர் இந்த விஷயத்தில் தீவிரம் காட்டினால் விரைவில் ஆதார்-வாக்காளர் அட்டை இணைக்கும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு மருத்துவமனைக்கு 300 லிட்டர் தாய்ப்பால் வழங்கிய திருச்சி பெண்.. சாதனை புத்தகத்தில் இடம்..!

பீகார் மக்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை தவறில்லை: டிடிவி தினகரன்

8 மாவட்டங்களை வெளுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

தொடர் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேற்றம்.. இந்திய பங்குச்சந்தை மீண்டும் சரிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments