Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு விபத்து ஏற்பட்டால் உடனே அழைக்க வேண்டிய எண்கள்: பொது சுகாதார துறை அறிவிப்பு..!

Siva
வியாழன், 31 அக்டோபர் 2024 (07:30 IST)
பட்டாசு விபத்து ஏற்பட்டால் உடனே தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் குறித்த விவரத்தை பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பொது சுகாதார சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது:

தீபாவளி பண்டிகை நேரத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டு விபத்து ஏற்பட்டால் உடனடியாக 9444340496,  8754448477 மற்றும் 104 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும்.

பண்டிகை நேரங்களில் சாலை விபத்துக்கள் நேரிடும் என்பதை கருத்தில் கொண்டு சாலைகளில் பட்டாசுகள் வெடிக்க வேண்டாம். வெடிகளை திறந்த வெளியில் மட்டும் தான் வெடிக்க வேண்டும். அருகாமையில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வைத்திருக்கக் கூடாது.

தளர்வான ஆடை அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும். சுவாச பாதிப்பு உள்ளவர்கள் பட்டாசு புகையை சுவாசிக்காமல் கவனமாக இருக்க வேண்டும். ஆரம்ப சுகாதார மையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் அனைத்திலும் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் போதிய அளவில் வைக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments