Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் - ரயில் நிலையம்: 400 மீ நீளத்தில் உயர் மட்ட நடைபாதை..!

Siva
ஞாயிறு, 14 ஜனவரி 2024 (10:51 IST)
புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம்  பேருந்து நிலையத்திலிருந்து விரைவில் அமைய உள்ள கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வரை 400 மீட்டருக்கு புதிய நடை மேம்பாலம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  
 
சென்னை புறநகரில் கிளாம்பாக்கம் என்ற பகுதியில் தென் மாவட்டங்களுக்கான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு போதுமான வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
 
குறிப்பாக கிளாம்பாக்கம் நிலையம் செல்ல, மின்சார ரயில் இல்லை மெட்ரோ ரயில் இல்லை போதுமான பஸ் போக்குவரத்தும்  இல்லை என்று கூறப்படுறது. இந்த நிலையில் கிளாம்பாக்கம் பகுதியில் விரைவில் ரயில் நிலையம் அமைய இருப்பதாகவும் இந்த ரயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வதற்கு உயர்மட்ட நடை பாதை அமைக்கப்பட இருப்பதாகவும் இதற்காக  நில எடுப்பு பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
5900 சதுர மீட்டர் நிலத்தை கையகப்படுத்த செங்கல்பட்டு ஆட்சியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  ஆனால் இனிமேல் நிலம் கையகப்படுத்தப்பட்டு அதன்பின் நடை மேம்பாலம் அமைக்க குறைந்தது ஒரு வருடம் ஆவது ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் சாக போகிறேன், இல்லையேல் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்.. வரதடசணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை..!

நடிகை ராதிகாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் ஓபிஎஸ்..!

கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் தேவையில்லை! - முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு!

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments