Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் - ரயில் நிலையம்: 400 மீ நீளத்தில் உயர் மட்ட நடைபாதை..!

Siva
ஞாயிறு, 14 ஜனவரி 2024 (10:51 IST)
புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம்  பேருந்து நிலையத்திலிருந்து விரைவில் அமைய உள்ள கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வரை 400 மீட்டருக்கு புதிய நடை மேம்பாலம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  
 
சென்னை புறநகரில் கிளாம்பாக்கம் என்ற பகுதியில் தென் மாவட்டங்களுக்கான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு போதுமான வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
 
குறிப்பாக கிளாம்பாக்கம் நிலையம் செல்ல, மின்சார ரயில் இல்லை மெட்ரோ ரயில் இல்லை போதுமான பஸ் போக்குவரத்தும்  இல்லை என்று கூறப்படுறது. இந்த நிலையில் கிளாம்பாக்கம் பகுதியில் விரைவில் ரயில் நிலையம் அமைய இருப்பதாகவும் இந்த ரயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வதற்கு உயர்மட்ட நடை பாதை அமைக்கப்பட இருப்பதாகவும் இதற்காக  நில எடுப்பு பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
5900 சதுர மீட்டர் நிலத்தை கையகப்படுத்த செங்கல்பட்டு ஆட்சியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  ஆனால் இனிமேல் நிலம் கையகப்படுத்தப்பட்டு அதன்பின் நடை மேம்பாலம் அமைக்க குறைந்தது ஒரு வருடம் ஆவது ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

சங்பரிவாரின் பேச்சை கேட்டு நடக்கும் சீமான்? கட்சியிலிருந்து விலகிய ஜெகதீச பாண்டியன் பரபரப்பு அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments