Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் - ரயில் நிலையம்: 400 மீ நீளத்தில் உயர் மட்ட நடைபாதை..!

Siva
ஞாயிறு, 14 ஜனவரி 2024 (10:51 IST)
புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம்  பேருந்து நிலையத்திலிருந்து விரைவில் அமைய உள்ள கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வரை 400 மீட்டருக்கு புதிய நடை மேம்பாலம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  
 
சென்னை புறநகரில் கிளாம்பாக்கம் என்ற பகுதியில் தென் மாவட்டங்களுக்கான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு போதுமான வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
 
குறிப்பாக கிளாம்பாக்கம் நிலையம் செல்ல, மின்சார ரயில் இல்லை மெட்ரோ ரயில் இல்லை போதுமான பஸ் போக்குவரத்தும்  இல்லை என்று கூறப்படுறது. இந்த நிலையில் கிளாம்பாக்கம் பகுதியில் விரைவில் ரயில் நிலையம் அமைய இருப்பதாகவும் இந்த ரயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வதற்கு உயர்மட்ட நடை பாதை அமைக்கப்பட இருப்பதாகவும் இதற்காக  நில எடுப்பு பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
5900 சதுர மீட்டர் நிலத்தை கையகப்படுத்த செங்கல்பட்டு ஆட்சியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  ஆனால் இனிமேல் நிலம் கையகப்படுத்தப்பட்டு அதன்பின் நடை மேம்பாலம் அமைக்க குறைந்தது ஒரு வருடம் ஆவது ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

வளர்ப்பு நாய் கடித்ததால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன்! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

பேருந்தில் பயணம் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. அழகிய ஆண் குழந்தை பிறந்தது..!

திடீரென 11 நாள் உண்ணாவிரதம் இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

இந்திய அரசியல் சட்டத்தின் பெயர்கள் ஹிந்தியில் இருப்பதால் அனைவரும் உச்சரிக்க முடியாது- புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments