Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோக்கன் பெறாத அட்டைதாரர்கள்: பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற இன்றே கடைசி..!

Siva
ஞாயிறு, 14 ஜனவரி 2024 (10:32 IST)
டோக்கன் பெறாத அரிசி அட்டைதாரர்கள்  டோக்கன் பெற்று பொங்கல் பரிசுத்தொகை பெற இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
தமிழகத்தில் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக அரிசி சர்க்கரை மற்றும் கரும்பு ஆகியவற்றோடு ரூபாய் 1000 ரொக்க தொகையும் தரப்பட்டு வருகிறது.  
 
ஜனவரி 9ஆம் தேதி முதல் இவை வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சில அரிசி அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுக்கான டோக்கன் கிடைக்கவில்லை என புகார் அளித்தனர். 
 
இந்த நிலையில் டோக்கன் பெறாத அரிசி அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு பெறுவதற்கு டோக்கன்கள் வழங்கப்பட்டதாகவும் இன்று அவர்களுக்கு பொங்கல் பரிசு பெற கடைசி நாள் என்றும் கூறப்படுகிறது.  
 
ரேஷன் கடை ஊழியர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட இருப்பதால்  இன்று பரிசுத்தொகை கிடைக்காதவர்களுக்கு ஜனவரி 17-ஆம் தேதிக்கு பின்னரே பொங்கல் பரிசு தொகை கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments