Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சர் வீட்டில் சோதனை - தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

Webdunia
வெள்ளி, 13 மே 2016 (18:16 IST)
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 
ரங்கசாமி வீட்டில் பணம் மற்றும் ஏராளமான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படைக்கு வந்த ரகசிய புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
10 நிமிடம் நடைபெற்ற இந்த சோதனையில், அவரது இல்லத்தில் கார் நிறுத்துமிடம், தோட்டப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சோதனை நடந்த போது, ரங்கசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
 
வாக்குப்பதிவு வருகின்ற 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், முதலமைச்சர் இல்லத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருந்துதான் கிடைக்கவில்லை, மாவாவது கிடைக்கிறதே.. முதல்வர் மருந்தகம் குறித்து அண்ணாமலை..!

இது வெறும் டிரைலர் தான்.. மெயின் பிக்சர் இனிமேல் தான்: இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை..!

பைக் விபத்தில் இளைஞர் பரிதாப பலி.. ஹெல்மெட் அணியாததால் 12 துண்டுகளாக சிதறிய மண்டை ஓடு

ஒரு நாளில் இத்தனை விமானங்கள் ரத்தா? ஏர் இந்தியா சேவையால் அதிர்ச்சியில் பயணிகள்! - இன்றைய ரத்து நிலவரம்

வெளிநாட்டு பயணம் ஓவர்.. தொடங்கியது உள்நாட்டு பயணம்.. பிரதமர் மோடியின் 2 நாள் சுற்றுப்பயணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments