Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிப்பவர்களின் ஓட்டு எங்களுக்கு வேண்டாம்: வைகோ அதிரடி

Webdunia
வெள்ளி, 13 மே 2016 (17:31 IST)
தமிழகத்தில் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் குடிப்பவர்களின் 30 சதவீத ஓட்டு எங்களுக்கு வேண்டாம் என தேமுதிக-மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறியுள்ளார்.


 
 
தமிழக சட்டசபை தேர்தலில் அனைத்து கட்சிகளும் முன் வைக்கும் ஒரே விஷயம் மதுவிலக்கு ஒன்று தான். இந்நிலையில் சாத்தூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட வைகோ, “எங்கே போனாலும் மதுவிலக்கு பற்றி பேசுகிறீர்கள், போராடுகிறீர்கள், இதனால் நமது அணிக்கு வரவேண்டிய குடிமகன்கள் ஓட்டுல 30% நமக்கு போடாம போயிரப் போராங்க” என தனக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாக கூறினார்.
 
அதற்கு, “போகட்டும்யா, எங்களுக்கு மதுவால் மக்கள் அழியக் கூடாது, அவரின் குடும்பம் பாதிக்கப்படக் கூடாது அவ்வளவு தான், எங்கள் கொள்கை தான் எங்களுக்கு பெரிதே தவிர, ஓட்டு கிடையாது என வைகோ கூறியாதாக வைகோவே பேசினார்.
 
முன்னதாக மதுவிலக்கு விவகாரத்தில் திமுக, அதிமுக கட்சிகள் மக்களை ஏமாற்றுகின்றன எனவும், மக்களின் நலனில் அக்கறை இல்லாமல், தங்களின் நலனுக்காக மட்டுமே அரசியல் செய்து வருகின்றனர் எனவும் குற்றம் சாட்டினார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைத்தது ஏன்? எங்கெங்கே தாக்குதல் நடந்தது..? - ஆபரேஷன் சிந்தூர் புதிய தகவல்கள்!

இந்தியாவின் போரை இந்த உலகத்தால் தாங்க முடியாது! - உலக தலைவர்கள் ரியாக்‌ஷன்!

இந்திய ராணுவத்தால் பெருமை.. ஜெய்ஹிந்த்: ராகுல் காந்தி.. காங்கிரஸ் தலைவர்களும் ராணுவத்திற்கு பாராட்டு..!

ஆபரேசன் சிந்தூர் தாக்குதலுக்கு முன் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கி சூடு.. 3 இந்தியர்கள் பலி..!

இந்தியாவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான் ராணுவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments