Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10, 12 வகுப்புகள் பொதுத்தேர்வால் நாடாளுமன்ற தேர்தல் தேதி மாறுகிறதா?

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2023 (14:18 IST)
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வு காரணமாக தேர்தல் தேதி மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் தேதி குறித்து தேர்தல் ஆணையம் தற்போது ஆலோசனை செய்து வருகிறது. மார்ச், ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களில் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பிற வகுப்புகளுக்கு தேர்வு நடைபெற இருப்பதால் தேர்தல் தேதியை மார்ச் ஏப்ரலுக்கு பின் வைக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. 
 
வாக்குப்பதிவு பெரும்பாலும் பள்ளிகள் தான் நடப்பதால் தேர்வுகளுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக தேர்வு தொடங்கும் முன்பே வாக்கு பதிவை நடத்தி விடலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.  
 
தேர்தல் தேதி குறித்து தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாகவும் இன்னும் ஒரு சில வாரங்களில் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலிக்க மறுத்த ஆசிரியை! கொன்று தாலிக் கட்டி செல்ஃபி எடுத்த கொடூரன்!

11.50 லட்சம் சாதாரண மீட்டர்கள் வாங்கும் பணியை மின் வாரியம்.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்ன ஆச்சு?

வலது காலுக்கு பதில் இடது காலில் ஆபரேஷன்.. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!

நாளை குடமுழுக்கு விழா.. இன்று மதியம் வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி: அமைச்சர் சேகர்பாபு

அமெரிக்க அரசியலில் புதிய அத்தியாயம்: 'அமெரிக்கா கட்சி' உதயம் - டிரம்ப்புக்கு எதிராக களமிறங்கும் எலான்

அடுத்த கட்டுரையில்
Show comments