Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது? மாலை 6.30 மணிக்கு அறிவிப்பு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது? மாலை 6.30 மணிக்கு அறிவிப்பு!
, புதன், 26 ஜனவரி 2022 (15:07 IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை இன்று மாலை 6.30 மணிக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக தகவல். 

 
சமீபத்தில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 
 
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை இன்று மாலை 6.30 மணிக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அரும்பாக்கம் அலுவலகத்தில் தேர்தல் அட்டவணையை ஆணையர் பழனிக்குமார் வெளியிடுகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆண்மையற்ற அதிமுக? அண்ணாமலை வருத்தம்!