Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரசாரம் நிறைவடைந்த பின் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை: சத்யபிரதா சாகு

Sathya Pradha Saghu

Mahendran

, செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (13:38 IST)
தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த பின் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் முடிவடை உள்ளதை அடுத்து பிரச்சார காலம் முடிவடைந்த உடன் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். அவர் கூறியதன் முக்கிய அம்சங்கள் இதோ:
 
பிரசாரம் நிறைவடைந்த பின், தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த கூடாது. தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்களில் தேர்தல் பரப்புரை செய்ய கூடாது. விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை, அபராதம் விதிக்கப்படும்
 
வாக்காளர் அல்லாதவர்கள் நாளை மாலை 6 மணிக்கு மேல் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும். மேலும் தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் உள்ளிட்ட இடங்களில் வெளியாட்கள் யாரும் தங்க கூடாது. இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னை விட கோபக்காரரா இருக்காரே.. மகனை நினைத்து வருந்துகிறாரா வைகோ?