Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? தோ்தல் அதிகாரி பதில்

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (11:58 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா அவர்கள் நேற்று மாரடைப்பு காரணமாக திடீரென காலமான நிலையில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
 
இன்று வாக்காளர் பட்டியல் வெளியிட்ட போது இது குறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்தபோது சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியான 6 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதிமுறை உள்ளது என்றும் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் முறைப்படி அறிவிக்கப்பட்டதில் இருந்து ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற தொகுதி என்பதால் அதே கட்சிக்கு மீண்டும் கொடுக்கப்படும் என்று கூறப்படும் நிலையில் அந்த தொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments