Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளையுடன் முடிவடைகிறது தேர்தல் பிரச்சாரம்.. என்ன செய்ய காத்திருக்கிறார்கள் வாக்காளர்கள்?

Siva
செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (07:22 IST)
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 15ஆம் தேதி மாலை அதாவது நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. 
 
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் அனல் பரந்த நிலையில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தை அரசியல் கட்சி தலைவர்கள் செய்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் நாளை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடையுள்ள நிலையில் இன்றும் நாளையும் ஓய்வே இல்லாமல் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஒரு பக்கம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திமுக வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் தங்களது கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு வருகின்றனர். 
 
கடும் கோடை வெயிலிலும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வரும் நிலையில் நாளை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவு வருகிறது என்று கூறப்பட்டது. ஆனால் கோடை காலம் என்பதால் 5 மணியுடன் நிறைவு பெறும் பரப்புரை ஒரு மணி நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே 6 மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு' - கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!!

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்த KYN (Know Your Neighbourhood)!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

அடுத்த கட்டுரையில்
Show comments