Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைத்தேர்தல் நடக்குமா? தேர்தல் அதிகாரி பதில்!

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (12:30 IST)
தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தகவல். 

 
சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன்  உடல்நலக்குறைவு காரணமாக சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். 
 
இவரின் எதிர்பாரா இறப்பை தொடர்ந்து தமிழக சட்டமன்ற தொகுதிகளின் காலியிடம் 3 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காத்தவராயன் (குடியாத்தம்) , கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்) மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். மேலும், இடைத்தேர்தலுக்கான தேதி முடிவு செய்யவில்லை என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments