Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிப்பா?

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (10:17 IST)
தமிழகத்தில் சமீபத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் விரைவில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது
 
இன்று மாலை 04.30 மணி மற்றும் 6 மணி என இரண்டு கட்டமாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளது. இந்த ஆலோசனைக்கு பின்னர் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அனேகமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments