Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிப்பா?

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (10:17 IST)
தமிழகத்தில் சமீபத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் விரைவில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது
 
இன்று மாலை 04.30 மணி மற்றும் 6 மணி என இரண்டு கட்டமாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளது. இந்த ஆலோசனைக்கு பின்னர் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அனேகமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments