Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம்: களை கட்டுகிறது தேர்தல்

234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம்: களை கட்டுகிறது தேர்தல்
, செவ்வாய், 26 ஜனவரி 2021 (07:27 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தேர்தல் குறித்த அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் தமிழக தேர்தல் ஆணையம் ஏற்கனவே தேர்தலை நடத்த தயாராகியுள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
மேலும் தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்தது குறித்த தேர்தல் அதிகாரிகளின் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார் என்பதும் இந்த பட்டியல் அரசு இதழிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த பட்டியல் தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது என்பதும் அவற்றை விரும்புபவர்கள் அந்த இணையதளத்திற்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடதக்கது இதனை அடுத்து தமிழகத்தில் தேர்தல் களை கட்டி விட்டது என்பதும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி விட்டது என்பதும் தெரிந்ததே
 
இன்னும் ஒருசில வாரங்களில் தேர்தல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தலைமை தேர்தல் ஆணையத்திடம் இருந்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.90ஐ நெருங்கிய பெட்ரோல் விலை: விரைவில் சதமடிக்குமா?