Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று ஜேபி நட்டா தேர்தல் பிரசாரம்: ராதிகாவுக்கு வாக்கு கேட்கிறார்..!

Siva
ஞாயிறு, 7 ஏப்ரல் 2024 (07:12 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஏற்கனவே தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக தேசிய தலைவர்கள் தமிழகம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். முதல் கட்டமாக பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தமிழகத்திற்கு நேற்று இரவு திருச்சி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் அவர் நான்கு தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சிதம்பரம் வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் பேசும் ஜேபி நட்டா, அதன் பின்னர் கரூர் வேட்பாளர் செந்தில்நாதனுக்கு ஆதரவாக ஜேபி நட்டா பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் 
 
விருதுநகரில் நடிகை ராதிகாவுக்கும், திருச்சியில் அமமுகவின் செந்தில்  நாதனுக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்த பின்னர் திருச்சியில் ஜேபி நட்டாவின் வாகன பேரணிக்கு நேற்று அனுமதி மறுக்கப்பட்டதால் பிரசாரம் மட்டும் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகஸ்ட் மாதம் முதல் இலவச மின்சாரம்.. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு..!

தங்க கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு எத்தனை ஆண்டு சிறை தண்டனை? ஜாமின் கிடையாது..!

காமராஜர் ஏசியிலதான் தூங்குவாரா? அவரை அசிங்கப்படுத்துவதே திமுகதான்! மன்னிப்பு கேட்கணும்! - அன்புமணி ஆவேசம்!

கீழடி ஆய்வின் உண்மையை மறைக்க மத்திய அரசு முயற்சி!? - கீழடி ஆய்வாளர் அமர்நாத் ஆவேசம்!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments