Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவோடு அண்ணன் ஸ்டாலின் நட்பு பாராட்டியிருந்தால்....- திருமாவளவன் பிரசாரம்

Sinoj
சனி, 6 ஏப்ரல் 2024 (22:00 IST)
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடக்கவுள்ளது.
 
இதையொட்டி திமுக, அதிமுக, பாஜக, உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
 
இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவில் மதிமுக, விசிக உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து வரும் மக்களவை தேர்தலை சந்திக்கவுள்ளன.
 
இந்த நிலையில், இன்று சிதம்பரத்தில் நடைபெற்று வரும் பிரச்சார கூட்டத்தில் விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன் பங்கேற்று பேசிவருகிறார்.
 
அவர் பேசியதாவது:

பாஜகவோடு அண்ணன் ஸ்டாலின் நட்பு பாராட்டியிருந்தால், அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது. மோடி, அமித்ஷா கும்பலுக்கு அச்சம் இருக்கிறது என்றால் தமிழ் நாட்டு முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலினை கண்டுதான் அச்சம். சமூக நீதியை பாதுகாப்பதுதான் நமது நோக்கம். அரசியலைப்பு சட்டத்தை பாதுகாப்பதுதான் நமது நோக்கம். ஜன நாயகத்தை பாதுகாப்பதுதான் நமது நோக்கம் என்று எத்தனை நெருக்கடி வந்தாலும் அந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள தயார் என்ற நெஞ்சுரத்தோடு பாசிச பாஜக அரசை விரட்டியடிப்பதற்கான வியூகத்தை அமைத்திருக்கிறார் அண்ணன் ஸ்டாலின் என்று கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை வீழ்த்த விஜய்யை கட்டாயம் கூட்டணிக்குள் இழுக்க வேண்டும்: அமித்ஷா கொடுத்த டாஸ்க்..!

பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் குடையுடன் செல்க.. 24 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

பழிக்கு பழி.. உக்ரைன் நாட்டின் மத்தியில் வரை சென்ற ரஷ்ய படை.. ட்ரோன்கள் இடைமறித்து அழிப்பு..!

6 மாதம் கூட ஆகவில்லை.. டிரம்பை எதிர்த்து பயங்கர போராட்டம்.. வன்முறையாக மாறியதால் பரபரப்பு..!

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments