Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பா.ரஞ்சித்தின் ஆசை கற்பனையில் மட்டுமே நிறைவேறும்: இல.கணேசன்

Advertiesment
இல.கணேசன்
, திங்கள், 10 டிசம்பர் 2018 (08:37 IST)
இயக்குனர் பா.ரஞ்சித் சமீபத்தில் ஜாதி குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதற்கு திருமாவளவன், சுப வீரபாண்டியன் போன்ற தலைவர்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தற்போது பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் கருத்து குறித்து இல.கணேசன் அவர்கள் கூறியபோது, 'பா.ரஞ்சித்தின் கருத்துகள் அவரது ஆசை, கற்பனையில் மட்டுமே நிறைவேறும். ஜாதிக்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது ஒருபோதும் நடக்காத செயல். அம்பேத்கரை பாஜக கொண்டாடுவதற்கு முழு உரிமை உள்ளது' என்றார்

webdunia
மேலும் 'ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. நாடாளுமன்ற தேர்தலுக்குள் 2 அணிகள் அல்ல தமிழகத்தில் மூன்றாவதாக ஓர் அணி உருவாகும்' என்றும் இல.கணேசன் கூறினார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – அணிகள் ஒன்றிணைப்பா ?