Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அங்கன்வாடிகளில் எல்கேஜி, யூகேஜி மூடப்படுகிறதா? – கல்வித்துறை விளக்கம்!

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (08:57 IST)
அரசு அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக வெளியான தகவல் குறித்து கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

அரசு அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை தொடர்த்து ஆண்டுதோறும் அரசு அங்கன்வாடி மையங்கள் மூலமாக 52,933 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் அரசால் தொடங்கப்பட்ட 2,381 அங்கன்வாடி மையங்களிலும் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை மூட உள்ளதாக தகவல் பரவியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என தொடக்கக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் அளித்த விளக்கத்தில் “அந்த வகுப்புகளை நடத்துவதற்கு தேவையான ஆசிரியர்களை அந்தந்த பணியிடங்களில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்” என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments