Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுத்தேர்வு எப்போது? எப்படி? – அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (11:45 IST)
தமிழகத்தில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதலாகவே பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே கல்வி பயின்று வருகின்றனர். முன்னதாக கடந்த சில மாதங்கள் முன்னர் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு கொரோனா பரவியதால் மீண்டும் மூடப்பட்டது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதமே நடந்து முடிந்திருக்க வேண்டிய 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா, தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் இன்னமும் நடத்தி முடிக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு கேள்வி எழுப்பியிருந்தது. இது தொடர்பாக தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தேர்வு எப்போது நடத்துவது, முக்கியமான பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தலாமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேச்சை குறைத்து, செயலில் காட்டுவதுதான் எனது பாணி.. விமான நிலையத்தில் முதல்வர் பேட்டி..!

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு: ஒரு சவரன் ரூ.77,000ஐ நெருங்கியதால் பரபரப்பு..!

வரிவிதிக்க ட்ரம்புக்கு அதிகாரம் இல்லை! அமெரிக்க நீதிமன்றம் அதிரடி! - இந்தியா மீதான வரி நீக்கம்?

இந்தியா யானை போன்றது.. அமெரிக்கா எலி தான்.. பொருளாதார நிபுணர் எச்சரிக்கை..!

நெல்லை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments