Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவுடன் தொடர்பில் இருப்பதா? அதிமுக நிர்வாகிகளுக்கு ஈபிஎஸ் எச்சரிக்கை..!

Siva
திங்கள், 10 மார்ச் 2025 (09:44 IST)
திமுகவுடன் தொடர்பில் இருக்கும் அதிமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
82 மாவட்டங்களை சேர்ந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் காணொளி மூலம் நேற்று நடைபெற்றது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு காணொளி மூலம் கட்சி நிர்வாகிகளுடன் பேசினார்.
 
அப்போது, அதிமுக நிர்வாகிகள் சிலர் உள்ளூர் திமுக அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பதாக புகார் வந்துள்ளதாகவும், திமுக அமைச்சர்களுடன் தொடர்பில் இருக்கும் அதிமுக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், சரியான விளக்கம் அளிக்க அளிக்காவிட்டால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
 
ஏற்கனவே, திமுக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்பில் இருப்பதாக அதிமுக தலைமைக்கு புகார் வந்த நிலையில், இந்த எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments