Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிந்து மதத்துக்கு மாறிய கிறிஸ்தவர்கள்.. கோயிலாக மாற்றப்பட்ட சர்ச்..!

Siva
திங்கள், 10 மார்ச் 2025 (09:40 IST)
ராஜஸ்தானில் உள்ள பழங்குடி இனத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ குடும்பங்கள் மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பியதை அடுத்து, அங்கு கட்டப்பட்டிருந்த சர்ச், ஹிந்து கடவுள் கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பு, கவுதம் கராசியா என்பவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதோடு, ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா என்ற பகுதியில் ஒரு சர்ச் கட்டினார். இப்போது அவரே மீண்டும் இந்து மதத்துக்கு மாறி, அந்த சர்ச்சை கோவிலாக மாற்றியுள்ளார். அவர் அந்த கோவிலின் பூசாரியாகவும் மாறியுள்ளார்.

மேலும், அந்த கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான கிறிஸ்துவ குடும்பங்கள் விருப்பத்துடன் சொந்த மதத்திற்கு திரும்பியதாகவும், தேவாலயத்தை பைரவர் கோவிலாக மாற்ற ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாகவும் கவுதம் தெரிவித்துள்ளார்.

இதுவரை சர்ச் கட்டிடத்திற்கு மஞ்சள் நிறம் பூசப்பட்டிருந்த நிலையில், தற்போது காவி வண்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று பைரவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும், அப்போது பொதுமக்கள் உணர்ச்சி மிகுந்த வகையில் "ஜெய் ஸ்ரீ ராம்" என கோஷம் எழுப்பியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் பட்டப்பகலில் 20 வயது இளைஞர் மீது துப்பாக்கி சூடு.. ஆம் ஆத்மி கண்டனம்..!

பஹல்காம் தாக்குதல்.. 2 மாதங்களுக்கு பின் இருவரை கைது செய்த NIA.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

தவறான விமான டிக்கெட் வழங்கிய ஸ்பைஸ்ஜெட்.. நுகர்வோர் கோர்ட் அளித்த அதிரடி தீர்ப்பு..!

மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரம் பெங்களூரு.. தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ வைரல்..!

அமெரிக்க தாக்குதலுக்கு பின் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்.. பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments