Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிசாமி இருப்பது தற்காலிக பதவி தான்- முதல்வர் ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (17:47 IST)
எடப்பாடி பழனிசாமி கட்சியிலுள்ள எம்.எல்.ஏக்களே அவருடன் பேசுவதில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
அதிமுகவின் 50 எம்.எல்.ஏக்கள் எங்கள் லிங்கில் உள்ளனர். ஆர்.எஸ்.பாரதி நேற்று முன் தினம் திமுகவின் 10 எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு கட்சி மாற இருப்பதாக எடப்பாடி பழனிசாமி  கூறியிருந்தார்.

 இதற்கு,  திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி 50 அதிமுக எம்எல்ஏக்கள் எங்களிடம் லிங்கில் உள்ளனர் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும், 50 அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் 30 மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் எங்கள் லிங்கில் இருக்கிறார்கள் என்றும் நாங்கள் எப்போது அழைத்தாலும் திமுகவுக்கு அவர்கள் வந்து விடுவார்கள் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு இன்று முதல்வர் முக ஸ்டாலின், 10 திமுக எம்.எல்.ஏக்கள் தங்களோடு பேசுவதாக எடப்பாடி பழனிசாமி சொல்லியுள்ளார். முதலில் அவர் கட்சியிலுள்ள எம்.எல்.ஏக்களே அவருடன் பேசுவதில்லை. அவர் இருப்பதே தற்காலிக பதவியில்தான்.  மேலும், தானும் உயிர்வாழ்வதாகக் காட்டிக்கொள்ளவே இப்படி அவர் பேசிவருகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments