Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்தியில் வலுவான ஆட்சி.. மாநிலத்திலும் தீய சக்தி அகற்றப்படும்: பிரச்சாரத்தை தொடங்கிய ஈபிஎஸ்..!

Siva
செவ்வாய், 8 ஜூலை 2025 (07:56 IST)
மத்தியில் வலுவான ஆட்சி இருக்கும் நிலையில், மாநிலத்திலும் தீய சக்தி அகற்றப்பட்டு வலுவான ஆட்சி அமைக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி பொதுமக்கள் மத்தியில் பேசியுள்ளார். 
 
'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது பயணத்தை தொடங்கிய நிலையில், கோவையில் உள்ள மேட்டுப்பாளையத்தில் அவர் ஆவேசமாக பேசினார்.
 
"மத்தியில் வலுவான ஆட்சியை நாங்கள் கொண்டுள்ளோம். அதேபோல் தமிழ்நாட்டிலும் வரும் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டு வலுவான ஆட்சி அமைப்போம். தீய சக்தியான தி.மு.க. வரும் தேர்தலில் அகற்றப்பட வேண்டும்," என்று தெரிவித்தார். 
 
"அஜித்குமார் என்ற இளைஞரைக் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்கள் என்றும், தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றும், சட்டம் இல்லை என்றும் தெரிவித்தார்.
 
பெண்கள் வெளியில் நடமாடக்கூட முடியாத அளவுக்கு பாதுகாப்பு சூழல் உள்ளது என்று தெரிவித்த அவர், "கொள்ளை அடிப்பதே தி.மு.க.வின் நோக்கம் என்றும், தி.மு.க. ஆட்சியில் மின்கட்டணம் உயர்ந்துள்ளது. இதுவரை நான்கு ஆண்டுகளில் 52% உயர்த்தப்பட்டுள்ளது," என்றும் அவர் தெரிவித்தார்.
 
 "அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி இயல்பானது. தேர்தல் கூட்டணி என்பது எதிரிகளை வீழ்த்தவும், வாக்குகள் சிதறாமல் இருப்பதற்கும் இந்த கூட்டணி" என்று கூறிய அவர், "கடந்த 99 ஆம் ஆண்டு பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைக்கவில்லையா? என்றும் கேள்வி எழுப்பினார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்லக்கண்ணு தவறி விழுந்து காயம்.. தொலைபேசி வழியாக உடல்நிலையை விசாரித்த விஜய்..!

கொடைநாட்டிலே நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி..!

விஜயகாந்த் இடத்தை விஜய் நிரப்புவார்: தாடி பாலாஜி பேட்டி..!

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments