Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூக நீதியை விதைத்த பேரறிஞர்! – அண்ணா பிறந்தநாளில் எடப்பாடியார் ட்வீட்!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (09:54 IST)
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இன்று தமிழக முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அண்ணாவின் நினைவை போற்றும் வகையில் அவரது திருவுருவ சிலைக்கு பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்ணாவின் பிறந்தநாள் குறித்து பதிவிட்டுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ” நம் கழகத்தின் முதல் பெயர், திராவிட கொள்கைகளை சென்னை மாகாணத்தில் வேரூன்ற வைத்து அதை தமிழ்நாடாக மாற்றிய புரட்சியாளர், சமூக நீதியை மேடை பேச்சிலிருந்து கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் விதைத்த பேரறிஞர் அவர்களின் 113ஆம் பிறந்த நாளில் “ #அண்ணா நாமம் வாழ்க” என்று வணங்கி போற்றுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாக்பூர் வன்முறைக்கு காரணமான முக்கிய குற்றவாளியின் வீடு இடிப்பு: பெரும் பரபரப்பு..!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமரை சந்திக்கும் தமிழக எம்பிக்கள் குழு..!

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

பெண் குழந்தை பிறந்தால் அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்த வேண்டும்: கலெக்டர் உத்தரவு..!

கடந்த வாரம் போலவே இந்த வாரமும் பங்குச்சந்தை ஏற்றம்.. சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகள் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments