Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியை சந்தித்தபோது மனு அளித்த எடப்பாடியார்? - மனுவில் இருந்தது என்ன?

Prasanth K
ஞாயிறு, 27 ஜூலை 2025 (09:42 IST)

நேற்று தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து மனு அளித்தார்.

 

நேற்று தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்த பிரதமர் மோடி, அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள விமான முனையத்தை திறந்து வைத்தார். பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி கனிமொழி, டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரசு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மீண்டும் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலமாக திருச்சி சென்றடைந்தார் பிரதமர் மோடி.

 

அப்போது அங்கு அவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து சில நிமிடங்கள் உரையாடினார். அப்போது மனு ஒன்றையும் பிரதமர் மோடியிடம் அளித்தார். அதில் 3 முக்கிய கோரிக்கைகளை அவர் முன் வைத்துள்ளார். அந்த கோரிக்கைகளாவன:

விவசாய கடன் வழங்குவதற்கு விவசாயிகளுக்கு உள்ள சிபில் ஸ்கோர் முறையில் இருந்து விதிவிலக்கு வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்திக்கு உதவும் வகையில் சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சியை இணைத்து பிரத்யேக வழித்தடம் ஒன்றை உருவாக்க வேண்டும்.

கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்ற வேண்டும்

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்குவங்கத்தில் 1.25 கோடி வாக்காளர்கள் சட்டவிரோதமாக வந்த குடியேறிகள்: பாஜக அதிர்ச்சி தகவல்..!

தாய்லாந்து - கம்போடியா போர் நிறுத்தத்திற்கு நான் தான் காரணம்: டிரம்ப்

வீடு புகுந்து இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றிய மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments