Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது திமுக அரசு: ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!

Webdunia
வியாழன், 9 மார்ச் 2023 (11:26 IST)
செயற்கையான மின் தட்டுப்பாட்டை திமுக அரசு ஏற்படுத்துகிறது என அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். 
 
கோடை காலம் நெருங்கிவிட்டதை அடுத்து கோடை என்றாலே அனைவரும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனைகளில் ஒன்று மின்வெட்டு. கோடையில் மின் உற்பத்தி குறைவாக இருக்கும் என்பதால் மின் தட்டுப்பாடு நிலவும் என்றும் அதனால் மின்வெட்டு ஏற்படுவது என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறிய போது செயற்கையான ஒரு மின் தட்டுப்பாட்டை திமுக அரசு ஏற்படுத்துவதோ என்ற சந்தேகம் விவசாயிகளுக்கு எழுந்துள்ளது என்று தெரிவித்தார். மேலும் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் புரியாத புதிராக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரத்தை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்றும் முறை வைத்து தான் மின்சாரம் பிரித்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது ஏற்புடையது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்து தோல்வி பழனிசாமியை மக்கள் நம்ப மாட்டார்கள்: முதல்வர் ஸ்டாலின்

ரத்தப்பணம் வேண்டாம்.. மன்னிக்க முடியாது.. நிமிஷாவால் கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் உறுதி..!

கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்.. மீண்டும் குறைகிறது ரெப்போ வட்டி விகிதம்..!

புதினிடம் பேசி போரை நிறுத்துங்கள்.. இல்லையெனில் உங்களுக்கு தான் பாதிப்பு: இந்தியாவுக்கு நேட்டோ எச்சரிக்கை..!

நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவித்து மோசடி.. 2 பேடிஎம் ஊழியர்கள் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments