தேர்தல் பிரச்சாரத்தில் செம பிஸி; பிரதமர் ஆலோசனையில் பங்கேற்காத எடப்பாடியார்!

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (09:39 IST)
கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து இன்று பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் காணொலி கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் அத்தியாவசிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடனும் இன்று பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருவதால் இன்று பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில் பங்கு கொள்வார்கள் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

SIR பணியை தடுக்கும் மாநிலங்களில் காவல்துறையின் பொறுப்பை நீதிமன்றமே எடுத்து கொள்ளும்: சுப்ரீம் கோர்ட்

சோழர் காலத்து கோவிலில் திருமணம் செய்ய தடை.. அதிக விவாகரத்து காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments