Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தயவுசெஞ்சு என் பொண்டாட்டி, புள்ளைய காப்பாத்துங்க! – முதல்வரிடம் கோரிக்கை விடுத்த ஊழியர்!

தயவுசெஞ்சு என் பொண்டாட்டி, புள்ளைய காப்பாத்துங்க! – முதல்வரிடம் கோரிக்கை விடுத்த ஊழியர்!
, திங்கள், 13 ஏப்ரல் 2020 (11:06 IST)
ஊரடங்கால் தமிழகத்தின் வேறு பகுதியில் சிக்கிக் கொண்ட ஊழியர் விடுத்துள்ள கோரிக்கைக்கு முதல்வர் பதில் அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளியூரில் சிக்கி கொண்டுள்ள ஊழியர் ஒருவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ட்விட்டர் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார். அதில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும், அவருடன் இருக்க முடியாமல் தனியாக வேறு மாவட்டத்தில் தான் சிக்கியுள்ளதாகவும் கூறி தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அவருக்கு பதிலளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி “உடனடியாக தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணை தெரிவிக்கவும் தம்பி. நிச்சயமாக தாயையும், சேயையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும்.” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது மனிதநேயமற்ற செயல்... டிடிவி தினகரன் காட்டம்!