Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு வேலை, 10 லட்சம் பணம், புதிய வீடு! – முதல்வர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (17:27 IST)
கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான இடத்தை சென்று பார்வையிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

மேட்டுப்பாளையத்தில் பங்களா ஒன்றின் சுற்றுப்புற சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும், சுவர் இடிய காரணமான பங்களாவின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணமாக 10 லட்சம் பணம், தகுதியின் அடிப்படையில் அரசு வேலை மற்றும் புதியதாக வீடுகளும் கட்டித்தரப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments