Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னோக்கு திட்டங்களே இல்லை; ஆளுனர் உரை ஏமாற்றமளிக்கிறது! – எடப்பாடியார் வருத்தம்!

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (12:21 IST)
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுனர் உரை ஏமாற்றம் அளித்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் துவங்கியது. இது முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் கூட்டத்தொடராகும். இந்த கூட்டத் தொடரில் ஆளுனர் வாசித்த உரையில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுதல், 15 நாட்களில் குடும்ப அட்டை போன்ற பல திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆளுனர் உரை குறித்து பேசியுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “ஆளுனர் உரையில் அரசின் முற்போக்கு திட்டங்கள் எதுவும் இல்லை. தேர்தலின்போது திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் இடம்பெறவில்லை. நீட் தேர்வு ரத்து என்ற அறிவிப்பு கூட ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை; ஆனால் அதற்கு மாறாக குழுவை அமைத்துள்ளதாக கூறுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பாலியல் வழக்கு.! மே 31ல் விசாரணை ஆஜராகும் பிரஜ்வல் ரேவண்ணா..!

ஜூன் 4-க்கு பிறகு மல்லிகார்ஜூன கார்கே பதவி விலகுவார்..! அமைச்சர் அமித்ஷா..!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்.! மழைக்கு வாய்ப்பு இருக்கா..?

ஜெயலலிதா ஆன்மிகவாதிதான்... ஆனால், மதவெறி பிடித்தவர் அல்ல: திருநாவுக்கரசர்

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர்.! சத்யபிரத சாஹூ தகவல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments