Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”அம்மா” பெயர் இருப்பதால் மூடிவிட்ட்டார்கள்! – எடப்பாடியார் கண்டனம்!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (10:32 IST)
அம்மா மினி க்ளினிக்குகள் மூடப்படுவதாக வெளியான அறிவிப்புக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களும் மருத்துவ வசதி பெறும் வகையில் அம்மா மினி கிளினிக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அதில் செவிலியர்கள் பணி அமர்த்தப்படாததால் அது செயல்படாமல் இருந்ததாகவும், ஒரு ஆண்டுகாலம் தற்காலிகமாக தொடங்கப்பட்ட அம்மா க்ளினிக்குகள் மூடப்படுவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர், இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “அம்மா பெயர் உள்ளது என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியால், மினி கிளினிக் திட்டம் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது. ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை திமுக அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments