Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக: ஈபிஎஸ் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு..

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக: ஈபிஎஸ் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு..

Mahendran

, சனி, 28 செப்டம்பர் 2024 (13:06 IST)
தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாததை கண்டித்து உண்ணாவிரத போராட்ட அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

திமுக அரசை கண்டித்து மதுரையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும், இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்பட அனைவரும் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொள்கின்றார்.

மேலும், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு ஆகியோர் தொடங்கி, நத்தம் விசுவநாதன், ராஜன் செல்லப்பா ஆகியோர் முடித்து வைப்பார்கள் என்றும் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்து கோவில் அதிகாரிகள் பணி, இனி இந்துகளுக்கு மட்டுமே: சந்திரபாபு நாயுடு