தமிழகத்தில் நீட்டிக்கப்படுமா ஊரடங்கு? – முதல்வர் விரைவில் ஆலோசனை

Webdunia
ஞாயிறு, 26 ஜூலை 2020 (08:43 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் 2 லட்சத்தை தாண்டியுள்ளது. நாளுக்குநாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஜூலை 31 வரை அறிவித்த பொதுமுடக்கம் முடிவடைய உள்ளது. எனினும் புதிய பாதிப்புகள் ஏற்படாத நிலை தமிழத்தில் உருவாகவில்லை. இந்நிலையில் இந்த மாத இறுதியோடு பொதுமுடக்கம் முடிவடைய உள்ள நிலையில் மேலும் நீட்டிக்கலாமா என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஜூலை 29ம் தேதி நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முழு முடக்கம் நீட்டிக்கப்படுமா அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு மற்ற நாட்களில் தளர்வுகள் அளிக்கப்படுமா என்பது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments