Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலுவையிலுள்ள சாலை பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை: முதல்வர் எடப்பாடி ஆய்வு

Webdunia
சனி, 22 ஜூன் 2019 (14:25 IST)
தமிழக முதலமைச்சர் பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து இன்று ஆய்வு நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று முதல்வர் பழனிசாமி தலைமியில் நடந்த கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களும், மாவட்ட அளவிலான அதிகாரிகள் என அத்தனை பேரும் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை பணிகள் எந்த அளவில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும், எத்தனை பணிகள் நிலுவையில் உள்ளது என்பது குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் அவர் சட்டசபையில் நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கை வர உள்ளதால், அது தொடர்பாக பல்வேறு விளக்கங்களையும் கேட்டறிந்தார்.

முதல்வர் பழனிசாமி, நிலுவையில் உள்ள சாலைப்பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கையை விரைவில் எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments