Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர், துணை முதல்வர் ஆளுநருடன் சந்திப்பு

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2018 (19:51 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தற்போது ஆளுநரை சந்தித்துள்ளனர்.

 
உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கொடுத்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைக்காமல் இருப்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்து வருகிறது.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவது போராட்டம் நடக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் கோரி நேற்று அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
 
இதனிடைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமரை நேரில் சென்று சந்தித்தார். தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்துள்ளனர்.
 
இந்த சந்திப்புக்கு முன் எடப்பாடி பழனிச்சாமி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனால் இந்த சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜி7 மாநாட்டிலிருந்து ட்ரம்ப் அவசர வெளியேற்றம்: மத்திய கிழக்கு பதற்றம் காரணமா?

15 வயது சிறுவனை கடத்திய விவகாரம்: ஏடிஜிபி ஜெயராமன் சஸ்பெண்ட்..!

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் பொதுச்செயலாளர் பதவியை ஈபிஎஸ் இழப்பார்: கே.என்.நேரு

முருகன் இருக்கும் இடமெல்லாம இந்துக்களுக்கு சொந்தம்.. அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி..!

நீலகிரியில் தொடர் கனமழை.. சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments