Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தினகரனுக்கு ஆப்பு வைக்க பழைய வழக்குகளை தூசி தட்டும் எடப்பாடி பழனிச்சாமி!

தினகரனுக்கு ஆப்பு வைக்க பழைய வழக்குகளை தூசி தட்டும் எடப்பாடி பழனிச்சாமி!

தினகரனுக்கு ஆப்பு வைக்க பழைய வழக்குகளை தூசி தட்டும் எடப்பாடி பழனிச்சாமி!
, புதன், 23 ஆகஸ்ட் 2017 (10:52 IST)
ஓபிஎஸ் அணியும் எடப்பாடி அணியும் இணைந்ததை அடுத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 
 
தின்கரன் தனது ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடிகளை கொடுத்து வருகிறார். குறிப்பாக தினகரன் ஆதரவாளர்களில் முக்கியமானவர்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரது ஆட்டம் அதிகமாகவே இருக்கிறது.
 
இவர்கள் இருக்கும் தைரியத்தில் தான் தினகரன் தைரியமாக இறங்கி செயல்படுகிறார். அதே நேரத்தில் இந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு ஆட்டம் காண்பிக்க எடப்பாடி பழனிச்சாமி களத்தில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீது ஏற்கெனவே இருக்கும் புகார்கள் மற்றும் வழக்குகள் பற்றிய கோப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டிருக்கிறாராம்.
 
அவர்கள் மீதான பழைய வழக்குகளை தூசி தட்டினால், அவர்களின் தினகரனுக்கு ஆதரவான செயல்பாடுகள் குறையும் என திட்டம் தீட்டி எடப்பாடி பழனிச்சாமி களத்தில் இறங்கியுள்ளார். விரைவில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீதான பழைய வழக்குகள் தூசிதட்டப்படும் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் தினகரன் அணியில் கருணாஸ்: ஆதரவு எம்எல்ஏக்கள் 37?