Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பினராயி விஜயனை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி – நதிநீர்ப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை !

Webdunia
புதன், 25 செப்டம்பர் 2019 (14:07 IST)
கேரள முதல்வர் பினராயி விஜயனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசவுள்ளார்.



தமிழகம் மற்றும் கேரளா அகிய இரு மாநிலங்களுக்கு இடையில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் முல்லை பெரியாறு, பரம்பிகுளம் – ஆழியாறு ஆகிய நதிநீர் பிரச்சனைகள் குறித்துப் பேசுவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கேரளா சென்றுள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் விருந்தினர் மாளிகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இரு மாநில முதல்வர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.  முதல்வருடன் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோரும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள உள்ளனர்.

நதிநீர் பிரச்சனை தொடர்பாக இரு மாநில முதல்வர்களும் 14 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துப் பேசுவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!

நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா

பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments