Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொங்கு மண்டல மக்களை ஏமாற்றும் எடப்பாடி பழனிசாமி - தினகரன் விளாசல்

Webdunia
திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (10:40 IST)
கொங்கு மண்டல மக்களை எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் ஏமாற்றி வருகிறார்கள் என தினகரன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளருமான தினகரன் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். மக்களை ஏமாற்றிவரும் எடப்பாடி விரைவில் மக்களாலேயே தூக்கி எறியப்படுவார்.
 
கொங்கு மண்டலத்தை சார்ந்த எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் அங்குள்ள மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை செய்யாமல் அவர்களது உறவினர்களுக்கே உதவி செய்தும், காண்டிராக்ட்டுகளை கொடுத்தும் அவர்களை வாழ வைத்து வருகிறார்கள்.
விரைவில் அவர்களுக்கெல்லாம் கொங்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என தினகரன் ஆவேசமாக பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments